Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மாணவிகள் 128 பேருக்கு தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான உதவித் தொகை பெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள்
உயர்கல்வியினை தொடரும் வகையில் தமிழ்நாடு அரசால் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சென்ற 2022-2023-ம் கல்வி ஆண்டில் இக்கல்லூரி மாணவியர் 128
பேருக்கு ஏறத்தாழ ரூ. 15 லட்சம் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் வங்கிக்
கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கல்லூரி வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்த மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
இதில் கல்லூரித் தலைவர் கே.நல்லுசாமி, செயலர் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், நோடல் அலுவலர் எஸ்.அனிதா, புதுமைப் பெண் திட்ட பொறுப்பாளர்கள் சி.கோபியா, எஸ்.மதுக்கரைவேணி, கல்லூரிப் பேராசிரியைகள் ஆர்.சகுந்தலாதேவி, எஸ்.கலைவாணி, எஸ்.மோகனப்பிரியா, எஸ். ஹேமலதா, கே.பாரதி, எம்.ரேகா, எம்.சரண்யா, வீ.சௌமியா, எம்.ரினிஷா ஆகியோர் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.